Press Release
Issues: Environment, Politics, Rural
Region: Chennai - North, Chennai - South, Tamil Nadu
Category: Articles, Press Releases
Date:
Fri, 23/12/2011
Press Release
தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளையொட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தாயகத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு நாளை (24.12.2011) காலை 10.30 மணியளவில் மாலையணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாளை ஒட்டி நாளை (24.12.2011) காலை 11.00 மணிக்கு சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
கோ. நன்மாறன்
செய்தித் தொடர்பாளர்

