முல்லை பெரியார் உரிமை காக்க கண்டன ஆர்ப்பாட்டம்
விவகாரங்கள்: பொருளாதாரம், விவசாயம், புறநகர்
மாவட்டம்: திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி
செய்தித்துறை: நிகழ்ச்சி
Date:
Thu, 28/01/2010 நமது முல்லைப் பெரியாறுக்கு வேட்டுவைக்க புதிய அணை எனும் கேரளத்தின் வஞ்சகத் திட்டத்திற்கு ஆய்வு செய்யஅனுமதி மத்திய அரசு கொடுத்ததைக் கண்டித்தும், புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டிய கடமையில் தவறுவதைக் கண்டித்தும், தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பை உணர்த்தும் வகையில், ஜனவரி 28 ஆம் நாள் தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டங்களில் அம்மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெறும்.

