கொழுந்துவிட்டு எரிகின்ற பிரச்சனையாக இன்றைக்கு மதத்தீவிரவாதம் இருக்கிறது. அது, குறிப்பிட்ட இந்த மதம்தான் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பல எல்லைகளைத் தாண்டி வளருவதும், அதன் விளைவாக வெறுப்பு வளர்வதும், ஆங்காங்கு கலவரங்கள், மோதல்கள் நிகழ்வதும் தொடர்கின்றன. அந்தக் கலவரத் தீ, நமது அன்னைத் தமிழகத்துக்கு உள்ளே வந்துவிடக்கூடாது என்ற கவலையால், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து உருவாக்கி, கட்டிக்காத்த நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை, ஒரு பொது நல ஊழியன் என்ற முறையில் எனக்கு இருக்கிறது என்பதால்தான், இந்த நிகழ்ச்சியை நான் முன்னின்று நடத்துகிறேன்.