முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • செய்திகள்
  • / வைகோ கோரிக்கை ஏற்பு

வைகோ கோரிக்கை ஏற்பு

December 8, 2021 by mdmk in செய்திகள் மாநிலங்களவை உரைகள்

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனைக் குழு கூட்டம் (Consultative Committee Meeting) நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் இன்று (08.12.2021) காலை 9 மணிக்கு, ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ பங்கேற்றார்.

அமைச்சர், அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தியில் பேசினர்.

அப்போது வைகோ குறுக்கிட்டு, “இங்கே எல்லோரும் இந்தியில் பேசுகின்றார்கள; நான் எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

“மூத்த உறுப்பினர் ஆகிய தாங்கள் இன்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமாக வரவேண்டிய மொழிபெயர்ப்பாளர் இன்று வரவில்லை.

எனவே, உங்கள் வேண்டுகோளை ஏற்று இந்தக் கூட்டத்தில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என சொன்னார்.

அதன் பிறகு பேசிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், வைகோ அவர்களை வரவேற்றுப் பேசினர்.

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களில், மொழிபெயர்ப்பாளர் ஒருவர், மொழி பெயர்த்துச் சொல்வது வழக்கம்.

உறுப்பினர்கள் காதுகளில் ஒலிபெருக்கி அணிந்துகொண்டு அதன் வழியாக மொழிபெயர்ப்பைக் கேட்க முடியும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
08.12.2021

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்
Next Post
கிறிஸ்துமஸ் வாழ்த்து!

Related News

சங்கொலி 31.07.2026
July 24, 2026 by Admin
சங்கொலி 24.07.2026
July 18, 2026 by Admin
சங்கொலி 17.07.2026
July 11, 2026 by Admin