முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • செய்திகள்
  • / ரஷ்ய உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது

ரஷ்ய உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது

ரஷ்ய உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது

மாநிலங்கள் அவையில் வைகோ கருத்து (15.03.2022)
March 16, 2022 by mdmk in செய்திகள் மாநிலங்களவை உரைகள்

ரஷ்ய உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது

மாநிலங்கள் அவையில் வைகோ கருத்து (15.03.2022)

உக்ரைன் மீது ரஷ்யா நடத்துகின்ற தாக்குதல் நியாயம் அற்றது. உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள். எத்தகைய தாக்குதல் என்றாலும் தாக்குப் பிடிப்பார்கள். கடந்த காலங்களில், ரஷ்யா மீது, பிற நாடுகள் படையெடுத்தபோது, முன்களப் போராளிகளாக நின்று, அதைத் தடுத்து நிறுத்தியவர்கள் உக்ரேனியர்கள்தான்.

கடந்த இருபது நாட்களாகப் போர் தொடர்கின்றது. இதற்கு முன்னர், உலகில் பல இடங்களில் இப்படிப்பட்ட மோதல்கள் நடைபெற்றபோதெல்லாம், இந்தியா நடுநிலைமை நாடுகளுக்குத் தலைமை தாங்கி, அணி சேராக் கொள்கையை நிலை நிறுத்தியது. அதனால், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகள் இடையே உயர்ந்து ஓங்கி இருந்தது. ஆனால், இம்முறை இந்தியா ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றது.

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்புச் சபையிலும், பொதுச்சபையிலும், விவாதம் எழுந்தபோது, இந்திய அரசு, தன் கடமையைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றேன்.

இவ்வாறு, வைகோ பேசினார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
15.03.2022

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருக!
Next Post
சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு நாளை மாற்றுக!

Related News

சங்கொலி 01.05.2026
April 24, 2026 by Admin
சங்கொலி 24.04.2026
April 17, 2026 by Admin
சங்கொலி 17.04.2026
April 10, 2026 by Admin