பத்திரிக்கை செய்தி – தலைமைக் கழகம்
பத்திரிக்கை செய்தி
தலைமைக் கழகம்
நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘பம்பரம்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கோரி, புது டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையாளருக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடந்த 11.12.2023 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தார். மீண்டும் 05.02.2024 அன்று நினைவூட்டு கடிதமும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையைப் பரிசீலித்து விரைந்து முடிவெடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று மனு தாக்கல் செய்திருக்கிறார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை – 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
29.02.2024