தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு
துணைப் பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தல்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளில் காலியாக உள்ள கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவில் நடைபெற இருக்கிறது.
துணைப் பொதுச்செயலாளர்கள்- 2 பேர்
மற்றும்
தலைமைக் கழகச் செயலாளர்- 1
தணிக்கைக் குழு உறுப்பினர்- 1
மேற்கண்ட பொறுப்புகளுக்கான தேர்தல் மார்ச் 23, 2022 அன்று சென்னை, அண்ணா நகர், 3ஆவது அவென்யூ -நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீமகாலில் நடைபெற உள்ள 28 ஆவது துக்குழுவில் நடைபெறும்.
தேர்தல் நடைமுறை
துணைப் பொதுச்செயலாளர் இருவர், தலைமைக் கழகச் செயலாளர் ஒருவர், தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் தாயகத்தில் 20.03.2022 அன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்கப்படும்.
வேட்புமனு முன்மொழிதல் / வழிமொழிதல்
1. துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு:
கழக பொதுக்குழு உறுப்பினர் தகுதி பெற்றுள்ள 25 பேர் முன்மொழிய வேண்டும். 25 பேர் வழிமொழிய வேண்டும்.
2. தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்பு:
பொதுக்குழு உறுப்பினர் தகுதிபெற்றுள்ள 25 பேர் முன்மொழிய வேண்டும். 25 பேர் வழிமொழிய வேண்டும்.
3. தணிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பு:
பொதுக்குழு உறுப்பினர் தகுதி பெற்றுள்ள 10 பேர் முன்மொழிய வேண்டும். 10 பேர் வழிமொழிய ண்டும்.
வேட்புமனு கட்டணம்
துணைப் பொதுச்செயலாளர் – ரூ. 25 ஆயிரம்
தலைமைக் கழகச் செயலாளர் – ரூ. 25 ஆயிரம்
தணிக்கைக் குழு உறுப்பினர் – ரூ. 10 ஆயிரம்
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
09.03.2022