முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / இ ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்வதன் பலன் குறித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

இ ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்வதன் பலன் குறித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

August 4, 2023 by Admin in அறிக்கைகள் மாநிலங்களவை உரைகள்

இ ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்வதன் பலன் குறித்து
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

கேள்வி எண். 896

‘இ ஷ்ரம்’ போர்ட்டலில் பதிவு செய்வதன் பலன் குறித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ எம்.பி. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு 27.07.2023 அன்று இந்திய ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் அவர்கள் அளித்த பதில் வருமாறு:-

(அ) இ-ஷ்ரம் (eshram.gov.in) இணைய பக்கத்தில் 30 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது உண்மையா?

(ஆ) அப்படியானால், மாநில வாரியாக, குறிப்பாக தமிழ்நாட்டின் பதிவு விவரங்கள் என்ன?

(இ) தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 2 லட்சம் விபத்துக் காப்பீடு, மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுமா?

(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள்.

(உ) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ ஷ்ரம் இணைய பக்கத்தில் பதிவு செய்வதன் பலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதேனும் சிறப்பு முகாம்கள் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி பதில்

(அ) முதல் (உ): ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 26 ஆகஸ்ட் 2021 அன்று ‘இ ஷ்ரம்’ (eshram.gov.in) இணைய பக்கம் அறிமுகப்படுத்தியது. ‘இ ஷ்ரம்’ இணைய பக்கம், 30 தொழில் துறைகள் மற்றும் சுமார் 400 தொழில்களின் கீழ் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

ஜூலை 18, 2023 நிலவரப்படி, 28.96 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் ‘இ ஷ்ரம்’ இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 84 இலட்சத்து 74 ஆயிரத்து 48 அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

விபத்துக் காப்பீட்டுத் தொகையை 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை.

விழிப்புணர்வுக்காகவும், அமைப்புசாரா தொழிலாளர்களை ‘இ ஷ்ரம்’ இணைய பக்கத்தில் பதிவு செய்வதைத் துரிதப்படுத்தவும் அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொது சேவை மையத்துடன் (CSC) ஒருங்கிணைத்து அவ்வப்போது அமைச்சகத்தால் பல பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இஷ்ராமில் பதிவு செய்ய தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடக தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மாநில சேவா கேந்திரா (SSKs) மற்றும் பொது சேவை மையங்களின் சேவைகள் மூலம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பதிவு செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. அலைபேசி செயலியிலும் (UMANG app) பதிவு இணைப்பு வசதி உள்ளது. இது தொழிலாளர்களிடையே பயன்பாட்டை அதிகரிக்கவும், அவர்களின் அலைபேசிகளின் வசதிக்கேற்ப பதிவு/புதுப்பிப்பு வசதியை வழங்க உள்ளது.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
04.08.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
மதுரை குலுங்கட்டும்! மாநாடு வெல்லட்டும்!! வைகோ கடிதம்
Next Post
சங்கொலி 11.08.2023

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin