முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் உடனே செயல்பட ஆவன செய்க! ஒன்றிய அரசுக்கு வைகோ வேண்டுகோள்

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் உடனே செயல்பட ஆவன செய்க! ஒன்றிய அரசுக்கு வைகோ வேண்டுகோள்

December 3, 2023 by Admin in அறிக்கைகள்

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் உடனே செயல்பட ஆவன செய்க!

ஒன்றிய அரசுக்கு வைகோ வேண்டுகோள்

இந்திய ஒன்றிய அரசின் 2002 ஆம் ஆண்டு தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் (Universal immunization Programme) அடிப்படையில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு சுமார் 594 கோடி ரூபாய் செலவு நிர்ணயம் செய்யப்பட்டு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலோடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இந்நிறுவனம் அறிவிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு இரண்டு தொழிற்சாலைக் கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

அங்கு தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்களை தற்சார்பு அடிப்படையில் பரிசோதிக்க தரக்கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் மருந்துப் பொருட்கள் தயாரிக்க நிர்ணயிக்கப்பட்ட செலவினைவ…
[20:00, 03/12/2023] Elangovan: தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் கனிமவளப் பகுதிகளுக்கான சுரங்கத்துறை மின் ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்!

கிராஃபைட் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிமங்களை எடுக்க மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் அறிவிப்பு ஒன்றிய சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது அதிர்ச்சியளிக்கின்றது.

கிராஃபைட் எனும் கனிமத்தை எடுக்க மின் ஏலம் கோரும் டெண்டர் அறிவிப்பில் தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம் திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குறிஞ்சாங்குளம் கிராமம் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சாங்குளம் கிராமப் பகுதிகளில் சுமார் 656.46 ஏக்கர் நிலப்பரப்பில் கிராஃபைட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, மின் ஏலம் விடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வெள்ளக்கால் பகுதி, நொச்சிப்பட்டி, வேலம்பட்டி வடக்கு, இலுப்பக்குடி, மண்ணடிப்பட்டி, மாருதிப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் வெவ்வேறு வகையான கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கும் மின் ஏலம் விடப்பட்டுள்ளது.

கிராஃபைட் கனிமத்தை எடுக்க முதலில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்.
குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட கனிம வளங்கள் கண்டறியப்பட்டு உள்ள கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இதன்மூலம் பாதிப்படையும்.

கிராஃபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழும். சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழும். கிராஃபைட் கனிமம் எடுப்பதால் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கிறோம், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம், கெயில் எரிவாயு குழாய் பதிக்கிறோம் என பல்வேறு நாசக்கார திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையினால் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்தத் திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும், வழக்குகளையும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டு இருக்கிறார்கள்.

கனிமங்களை எடுப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. மனிதர்களையும், சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் இவ்வகையான திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு மக்களின் எதிர்கால பாதிப்புகளை உணர்ந்து இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.

தென்தமிழ்நாட்டில், விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமலும், மாவட்ட நிர்வாகத்தையோ, தமிழக அரசையோ கலந்து ஆலோசிக்காமலும் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தொடக்கத்திலேயே இம்முயற்சியை ஒன்றிய அரசு கைவிடா விட்டால், மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் மக்களை திரட்டி போராடும் சூழல் உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை – 08
03.12.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தென்காசி மாவட்டத்தில் சுரங்கத்துறை மின் ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்! துரை வைகோ வைகோ அறிக்கை
Next Post
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin