முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / தினமலர் இட்டுக்கட்டிய பொய் செய்தி! வைகோ கண்டனம்

தினமலர் இட்டுக்கட்டிய பொய் செய்தி! வைகோ கண்டனம்

July 14, 2024 by Admin in அறிக்கைகள்

தினமலர் இட்டுக்கட்டிய பொய் செய்தி!

வைகோ கண்டனம்

திருச்சி தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தினமலர் சென்னைப் பதிப்பில் இன்று(14.07.2024) வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கட்சி நிர்வாகிகளிடம்,“திமுக நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைத்திருந்தால் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன்” என்று கூறியதாகவும், இந்தத் தகவல் பரவி திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் வெற்றிக்காக உழைத்தக் கூட்டணி கட்சியினருக்கு திருச்சி காஜாமலையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, துரை வைகோவுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார்” என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மறுமலர்ச்சி திமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிட வாய்ப்பளித்து வெற்றியை ஈட்ட முழு முதல் காரணமானவர் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை மறுமலர்ச்சி திமுக நன்றி பாராட்டுகிறது.

திருச்சியில் மூன்று இலட்சத்திற்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் துரை வைகோ வெற்றி பெற, அன்புச் சகோதரர் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் பங்களிப்பும் உழைப்பும் அளவிடற்கரியது.

அதே போல அமைச்சர் தம்பி மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் தி மு க மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் உழைப்பும் தேர்தல் பணிகளும் நன்றிக்கு உரியன ஆகும்.

இதனை தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த கனத்திலிருந்து ஊடகங்களுக்கும், ஏடுகளுக்கும் அளித்த நேர்காணல்களில் எடுத்துரைத்து துரை வைகோ திமுகவிற்கு இதயமார்ந்த நன்றியைக் கூறினார்.

ஆனால் தினமலர் ஏடு சென்னைப் பதிப்பில் இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு இருப்பது பத்திரிக்கை தர்மம் ஆகாது.

தினமலர் சென்னைப் பதிப்பில் இது போன்ற செய்திகளைப் பரப்பி அவதூறு செய்து திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் பிரச்சனை உருவாக்க வேண்டும் என்று கருதினால் அந்த நினைப்பில் மண் விழும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் காவல் அரண்களாகத் திகழும் பத்திரிக்கை ஊடகங்கள் அறநெறி தவறி செய்திகளை வெளியிடும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
14.07.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி! வைகோ வாழ்த்து
Next Post
காவிரி நீர் விவகாரம்: தமிழக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திமுக கருத்து!

Related News

சங்கொலி 01.05.2026
April 24, 2026 by Admin
சங்கொலி 24.04.2026
April 17, 2026 by Admin
சங்கொலி 17.04.2026
April 10, 2026 by Admin